எழுதலை நாகம் எழுந்துபின் குடையாக
எகிரும் திகிரி கையில் எழிலாக சுழன்றிட
முழங்கும் சங்கம் முத்தாக ஒளிவீச
முந்திடும் அபயகரம் முன்வந்து காத்திட
தழலென திண்கதை தண்டம் கைபிடிக்க
துவளும் மாலைகள் துலங்கும் மார்பினில்
அழகான அணிகலன் அடுக்காய் அசைந்திட
அலைகடல் கூந்தல்மேல் அலங்கார மணிமகுடம்
விளங்கும் மயிலிறகு விரிநெற்றித் திலகம்
வெண்ணிலவு முகமும் விழியில் கருணையும்
பழவிணை நீக்கி பக்தனை ஏற்றிட
பாசமுடன் வருகின்ற சத்ய நாராயணா!
பழமோடு பூக்களும் பல்வகை படையலும்
பாதத்தில் வைத்து பூஜித்து தொழுவார்க்கு
மழலைச் செல்வம் மனமகிழ்ந்து அருளும்
மாதவா சத்ய நாராயணா போற்றி! போற்றி!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக