ஆலிங்கனம் செய்து அகமகிழும் பாலகனே
அகக்கையில் விளக்கேற்றி ஆராதிக்கும் குணசீலனே
பூலிங்கம் வடிவாகிய பூதலத்தின் நாயகனே
பூமடந்தை உமையை புவிகாக்கும் தேவியை
சீலமுடன் பணிந்து சிறுநடையால் சுற்றிவந்து
சிந்தையில் பெற்றோரே சிறப்பான உலகமேன
காலத்தால் விளக்கி கனிபெற்ற விநாயகனே
குழ்ந்தை வடிவினில் குன்றெனநிறை அருள்வாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக