கலையாகி நீ வருவாய்
கைகளில் வீணை ஏந்திடுவாய்
விலையிலா கல்வி செல்வமதை
விரும்பினால் நீ அருள்வாய்
மலையருவி அருகே வீற்றிருப்பாய்
மயிலருகே ஆடிவர அமர்ந்திருப்பாய்
ஒலைச் சுவடி தாங்கி நிற்பாய்
ஒதும் ஜபமாலை கொண்டிருப்பாய்
தலையான செல்வம் நீ அருளிட
துலங்கும் இகபர வாழ்வுதானே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக