புதன், 15 ஏப்ரல், 2015

கலைவாணி



கலையாகி நீ வருவாய்
  கைகளில் வீணை ஏந்திடுவாய்
விலையிலா கல்வி செல்வமதை
  விரும்பினால் நீ அருள்வாய்
மலையருவி அருகே வீற்றிருப்பாய்
  மயிலருகே ஆடிவர அமர்ந்திருப்பாய்
ஒலைச் சுவடி தாங்கி நிற்பாய்
  ஒதும் ஜபமாலை கொண்டிருப்பாய்
தலையான செல்வம் நீ அருளிட
  துலங்கும் இகபர வாழ்வுதானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக