வளரும் குறையாது வளமிகு அட்சயாஎனில்
வளர்பிறை திரிதியை வாரிவழங்கும் நன்னாள்
வளரும் அட்சயதிரிதியை வாங்கி வழங்கி மகிழும்நாள்
வலம்புரி கணபதி மாபாரதம் எழுதியநாள்
களம்புகும் பலராமன் கண்ணனோடு அவதரித்தநாள்
கணத்தில் குபேரன் செல்வஅதிபதி ஆனதிருநாள்
துளபமாலை கண்ணன் துளிஅவல்உண்டு அட்சயஎன
துன்பம்நீங்கி குசேலன் தொடர்செல்வம் பெற்றநாள்
களபம்விரி திரெளபதிக்கு கானகத்தில் அட்சயபாத்திரம்
கண்னனால் பெருகிமுனி கடும்பசி நீக்கியநாள்
விளங்கும் நற்செயல் வீரியமுடன் செயல்படும்
விதைக்கின்ற நல்விதைகள் விருட்சமாகி பலன்தரும்
களங்கமிலா வாழ்வு கண்ணெதிரே கைகொடுக்கும்
கனிவான இன்சொல் கருத்துக்களை மாற்றும்
உளமாற தானம்செய் உன்னால் முடிந்ததை
உன்னத அட்சயதிரிதியை உயர்த்திடும் உம்செயலையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக