வியாழன், 16 ஏப்ரல், 2015

கந்தன் கழலடி



கைஅணைத்த கருநீலமயில் கந்தன்முகம் நோக்க
  கைவழியே வருகின்ற கனகவேல் தோள்தாங்க
கைவிரல்கள் ஐந்திணைந்து காக்கின்ற அபயம்தர
  கழுத்தினில் உத்திராட்சம் கருத்தோடு ஒளிவீச
கைலைமலைத் திருநீறும் கமலமுகமதில் துலங்கிட
  கருணைவிழி கண்ணிரண்டு கனிவோடு பார்த்திருக்க
கைகுவித்த பக்தனுக்கு கார்முகில் குழலாட
  கார்த்திகேயன் துணைவரும் கழலடி பணிமனமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக