கைஅணைத்த கருநீலமயில் கந்தன்முகம் நோக்க
கைவழியே வருகின்ற கனகவேல் தோள்தாங்க
கைவிரல்கள் ஐந்திணைந்து காக்கின்ற அபயம்தர
கழுத்தினில் உத்திராட்சம் கருத்தோடு ஒளிவீச
கைலைமலைத் திருநீறும் கமலமுகமதில் துலங்கிட
கருணைவிழி கண்ணிரண்டு கனிவோடு பார்த்திருக்க
கைகுவித்த பக்தனுக்கு கார்முகில் குழலாட
கார்த்திகேயன் துணைவரும் கழலடி பணிமனமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக