சிங்கத்தின் மேலமர்ந்த சிவசக்தி துர்கையே
சீறிவந்து தீமையை சிதறடிக்கும் தேவியே
அங்கமதில் ஒருபாதியாய் அமைந்திருக்கும் உமையே
அவனியில் ஆணவத்தை அழித்திடும் அம்மையே
எங்கும் ஒளிவீசும் எழிலான சூலமோடு
எட்டுக் கைகளில் எழும்பும் ஆயுதங்கள்
மங்கலமும் வாழ்வும் மெய்யான பக்தியும்
மனதில் உருவாக்கி மலரடியில் சேரவைப்பாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக