மயிலிறகு முன்தலையில் மகுடமென விளங்க
முத்துசரம் முகமதனை முத்தமிட்டு மகிழ்ந்திட
ஒயிலான குண்டலங்கள் ஒளிவீசி காதிலாட
ஒய்யார குழல்கற்றை ஒளிந்துபின் விளையாட
குயிலாகி கீதமிசைக்கும் குழலும் கையிலாட
கொத்தான முத்தணிகள் கொஞ்சி அசைந்தாட
கயல்விழிகள் கனிந்தாட கனிமுகம் விரிந்தாட
கண்ணனே வந்தருள்க கடைக்கண் தந்தருள்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக