பொற்குடம் தன்னோடு பூரணகலசம் தனைஅணைத்து
பொன்மாரி பொழிகின்ற பொற்கொடியே திருமகளே
நற்கடல் கடைந்திட நல்அமுதோடு வந்தவளே
நாரணன் திருமார்பில் நாளெல்லாம் இருப்பவளே
பாற்கடல் பரந்தாமன் பாதம்பற்றும் பொன்மகளே
பொற்கரங்கள் இரண்டினில் புதுக்கமலம் ஏந்தியே
பொற்றாமரை தனிலமர்ந்து புதுச்செல்வம் தருபவளே
புத்தாண்டில் எம்இல்லம் பொலிந்திட வரமருள்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக