புல்லாங்குழல் வழியே பொழிகின்ற அமுதகீதம்
பொன்விரல் மீட்ட பொலிகின்ற கண்ணனே
எல்லாம் அறிந்தவனே எளிமையாகி நிற்பவனே
எழில்மிகு மலையப்பா ஏனிந்த புதியகோலம்
முல்லை மலர்மாலை முத்தார நவமணிகள்
மோகன உருவாகி முறுவலுடன் வடிவெடுத்தாய்
கால்மடித்து அழகாக காளையென வீற்றிருப்பாய்
ககனத்தில் நல்வழியே காட்டிடுவாய் மனதுள்ளே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக