1. காயந்த கிளைகள் கருப்பு வளைவுகள்
கண்ணில் ஒர்இலையும் காட்சி தரவில்லை
சாயும் மாலை செவ்வண்ண மேகம்
சீரான ஒவியமாய் சருகான மரம்
ஒய்வான பறவைகள் ஒரிருகரும் காகங்கள்
ஒய்யாராமாய் உச்சியில் ஒலிஎழுப்பும் சத்தம்
காயும் கனியும் கரும்பச்சை நிறமுமாய்
கலகலவென அசைந்து காற்றிலாடிய மரமே!
2. இலை யாவும் இன்றுநீங்கி அந்திவான்
இருட்டில் ஒவியமாய் இருக்கின்ற மரமே
தலையான வாழ்வில் துள்ளிய மனம்
தான்பெற்ற செல்வம் தனைநாடும் சுற்றம்
அலைஒயா கடலென ஆர்ப்பரித்த வாழ்வு
அகன்று சென்றன அனைத்தும் இன்று
சிலையாகிய தனிமை சிந்தையில் தேக்கம்
சிறுகிளை துளிர்க்குமா? சிறப்புகள் தொடருமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக