சனி, 11 ஏப்ரல், 2015

வலம்புரி விநாயகனே



வலம்புரி விநாயகனே வரம்ளிக்கும் பெருமானே
  விரும்பிய இடமெலாம் வீற்றிருக்கும் வேழமே
மூலபலம் கொண்டு மூர்க்கரை அழித்தவனே
  மோகத்தை வென்றவனே மூஷிக வாகனனே
கோலமிகு அங்குசமும் கொழுக்கட்டையும் ஏந்திடுவாய்
  கோவிலாக எங்குமே குடியிருக்கும் முதல்வனே
சீலமிகு குணத்தோனே சிறப்பான வடிவோனே
  சிந்தை தெளிவுபெற சிறியவளை ஆட்கொள்வாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக