வலம்புரி விநாயகனே வரம்ளிக்கும் பெருமானே
விரும்பிய இடமெலாம் வீற்றிருக்கும் வேழமே
மூலபலம் கொண்டு மூர்க்கரை அழித்தவனே
மோகத்தை வென்றவனே மூஷிக வாகனனே
கோலமிகு அங்குசமும் கொழுக்கட்டையும் ஏந்திடுவாய்
கோவிலாக எங்குமே குடியிருக்கும் முதல்வனே
சீலமிகு குணத்தோனே சிறப்பான வடிவோனே
சிந்தை தெளிவுபெற சிறியவளை ஆட்கொள்வாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக