திருவல்லி நகர் வளர்ந்த தெய்வமகளே
திருமாலை வேண்டி நோன்பிருந்த தவமே
மருவிலா மாலையைத் தான்சூடி மகிழ்ந்த கொடியே
மார்கழிப் பாவைதந்த முழுமதிச் சுடரே
திருமணத்தை கனவில்கண்டு முடித்த கண்மணியே
திருமகளே ஆழ்வார் தேடிஎடுத்த மகளே
பெருமையை பெண்மைக்கு பாடிவைத்த மலரே
பாவைபாடி பதம்பணிவோம் என்றும் யாமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக