உத்தமனாய் உலகினில் உத்தரத்தில் உதித்தவனே
உண்மையின் உருவான உயர்வானின் சோதியே
வித்தகனே வேதப்பொருளே விழிகளில் வாழ்பவனே
வேகமான பம்பையில் விளைந்திட்ட அமுதமே
புத்திரனாய் பாலகனாய் பந்தளம் நிறைந்தவனே
பக்தருக்கு பலவடிவில் பரிவுதரும் பெரியோனே
புத்தம்புது அலையென புரண்டுஒன்றன் பின்ஒன்றாக
புரட்டிடும் சலனங்கள் பாவத்தின் அறுவடையோ
மத்தால் கடைகின்ற மண்சட்டித் தயிரானேன்
மாதவம் புரிபவனே மனஅமைதி தருவாயே!
நித்தம்உனை நிணைந்து நெஞ்சுருகி நிற்கின்றேன்
நீயேகதியென நின்பாதமதில் நான்சரண் புகுந்தேன்
அத்தனையும் உன்னருள் அறிவேன் ஐயப்பா
அன்பின் உணர்வுகளால் அசதிஉடற் சோர்வால்
இத்திரணியில் பொருளால் இனியவர் யாருக்கும்
இனியதொல்லை ஆகாதுஎனை இறுதிவரை வாழவிடு!
பூத்திட்ட மலர்போல உன் பாதமதில் சேர்த்துவிடு!
புவியில் வேண்டும்வரம் புண்ணியனே தந்துவிடு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக