வெள்ளி, 17 ஏப்ரல், 2015

அண்ணாமலை சோதியே



சோதியாகி நின்ற சுடரே பிழம்பே
பாதிமதியும் கங்கையும் பூண்டத் திருச்சடையே
ஆதிசேட விஷ்ணுவும் ஆதியான பிரம்மாவும்
வீதிவலம் காணஅக்னி வடிவமான அண்ணாமலையானே!
ஆதிசக்தியை தன்னுள்ஏற்ற அர்த்த நாரீஸ்வரனே
சதிதேவி உண்ணாமுலை சமேதனே சரணம்
மோதி எழுந்ததீ திருவண்ணா மலையாக

ஒதிடும் நமச்சிவாய ஒங்காரமே சரணம் சரணமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக