பொன்னிற மேனியும் பொலியும் நெற்றியில்
பூரிக்கும் திருநீறும் செந்திலகமும்
மின்னிடும் மகுடமும் மிளிரும் பிறைநிலவும்
மாந்தளிர் அங்கமதில் மல்லிகை மாலையும்
சென்னிய பாசமும் சிலிர்க்கும் கட்கமும்
செந்நிறக் கரங்களில் செந்தாமரை மலர்களும்
தன்னிகரிலா தங்கவண்ண ஆடைஅணியும்
தகைவான தாமரைப் பாதங்களும் என்
சென்னிதனில் வைத்தேன் சீர்மிகு பகளாமுகிதேவி
சூரியமங்கலம் வாழ்அரசி சீரிய வரமருளே!
sema kavitha, ammava pukazhrathukku varthai pothathu
பதிலளிநீக்கு