செவ்வாய், 7 ஏப்ரல், 2015

ஸ்ரீ பகளாமுகி தேவி



பொன்னிற மேனியும் பொலியும் நெற்றியில்
  பூரிக்கும் திருநீறும் செந்திலகமும்
மின்னிடும் மகுடமும் மிளிரும் பிறைநிலவும்
  மாந்தளிர் அங்கமதில் மல்லிகை மாலையும்
சென்னிய பாசமும் சிலிர்க்கும் கட்கமும்
  செந்நிறக் கரங்களில் செந்தாமரை மலர்களும்
தன்னிகரிலா தங்கவண்ண ஆடைஅணியும்
  தகைவான தாமரைப் பாதங்களும் என்
சென்னிதனில் வைத்தேன் சீர்மிகு பகளாமுகிதேவி
  சூரியமங்கலம் வாழ்அரசி சீரிய வரமருளே!

1 கருத்து: