வியாழன், 23 ஏப்ரல், 2015

ஸ்ரீ சாயி பிரசாதம்



புட்டப்பர்த்தி தன்னில் பிறந்த புதுமலரே
  பூவுலகு வாழவந்த பொன் மழையே
தட்டிஎழுப்பி தவம் காட்டிய இறைத்தவமே
  தாய்பசுவென அன்பை தானாகப் பொழியும்தாயே
மட்டிலா மகிழ்ச்சி மனதின் உள்ளே என்றே
  மாந்தருக்கு புகட்டிய மாபெரும் ஞானியே
கூட்டி வைத்து கோடான கோடிபேரை ஒரு
  குடும்பமென கொள்கைதந்த குணக்குன்றே

வட்டமிட்டு பூமியெங்கும் வாழ்வளித்த சத்யசாயி
  வானுலகு நீசென்றாலும் வந்தெமைக் காக்கின்றாய்
சுட்டும் இடமெல்லாம் சுந்தரப் புன்னகை
  சுடர்விடும் கருணை சொட்டுகின்ற கண்கள்
விட்டுவிட்டு நான்நினைக்க விடாதுஎனைத் தொடர்வாய்
  வாழ்கின்ற தெய்வமே வாழ்வியல் தத்துவமே
கூட்டுக் குஞ்சுகள்யாம் கூவியுனை அழைப்போம்
  கால்களால் நடந்துவந்து கைகளால் எமைக்காப்பாய்
தொட்டு உன்விரல்என் தலைமீது படரும்
  தூயவனே உன்அன்பின் தாக்கத்தை நான் அறிவேனே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக