பால்வடியும் முகமும் பளிச்சிடும் வெண்ணீரும்
பாங்கான சந்தணமும் பகட்டான குங்குமமும்
சேல்போன்ற விழிகளும் செவ்வாயில் புன்னகையும்
செவிகளில் சிறுவளையமும் சேவிக்கும் கரங்களும்
வேல்சுமந்த தோளும் விரிகுழலும் அசைந்தாட
விளங்கும் உத்திராட்சம் வியக்கும் அணியாக
மாலவன் மருகனே மலைமகள் புதல்வனே
முதல்வனுக்கு பொருளுரைத்த புண்ணியனே வந்தருள்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக