சனி, 18 ஏப்ரல், 2015

உலகம் அளந்தார்! உள்ளம் அளக்கிறார்!



சிறுகுடை தாங்கி சிற்றுருவம்தான் கொண்டு
  சிறுகால்கள் துள்ளிவர சிறுகுடுமி ஆடிவர
சிறுவனாய் வந்த செந்தூர வாமனனே
  சிறுவாய் திறந்து சிறுமழலை மொழியில்
சிறிதான பரிசாக சிற்றடியில் மூவடிதருக
  சிரித்தபடி கேட்க செங்கோல் முடியரசன்
சிறிதென நினைத்து சிந்தைமகிழ தந்தேன்என
  சிலிர்த்து எழுந்து செவ்வானம் தொடுகின்ற

திரிவிக்ரமனாய் உயர்ந்து தோன்றிய உத்தமனே
  தரணியை ஒரடியாய் திகழ்வானம் மறுவடியாய்
விரிந்தெழுந்து அளந்தவனே வேண்டிய மூவடிக்கு
  விருப்புடன் தலைமுடியை வணங்கிப் பணிந்திட
பறித்துஅகந்தை போக்கி பக்தியை தந்தருளி
  பாயும்ஒளி திருவோண பூக்கோலமதில் வருவோனே
பாரினில் எம்முடைய பாசங்களை அளந்தே
  பக்தியை எம்முள்ளே பாங்குடன் வைப்பாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக