புதன், 15 ஏப்ரல், 2015

அலையரசி



இருகையில் செந்தாமரை இனிதாக வீற்றிருக்கும்
  இளம்சிவப்பு பட்டாடை எழிலுக்கு எழிலூட்டும்
ஒருகை பொன்மாரி ஒயாமல் பொழிந்திருக்கும்
  ஒளிவீசி மறுகை ஒப்பிலா அபயம்தரும்
கருமேகக் கூந்தல் களிப்போடு விரிந்தாடும்
  கனிவான கண்ணிரண்டு கருணை மழைபொழியும்
திருமால் மார்பினில் திருவாக வீற்றிருப்பவளே

  திருமகளே நின்பார்வை தாயாகி கனிந்தருளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக