இருகையில்
செந்தாமரை இனிதாக வீற்றிருக்கும்
இளம்சிவப்பு பட்டாடை எழிலுக்கு எழிலூட்டும்
ஒருகை பொன்மாரி
ஒயாமல் பொழிந்திருக்கும்
ஒளிவீசி மறுகை ஒப்பிலா அபயம்தரும்
கருமேகக் கூந்தல்
களிப்போடு விரிந்தாடும்
கனிவான கண்ணிரண்டு கருணை மழைபொழியும்
திருமால் மார்பினில்
திருவாக வீற்றிருப்பவளே
திருமகளே நின்பார்வை தாயாகி கனிந்தருளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக