புதன், 15 ஏப்ரல், 2015

வேங்கடவா அழைப்பாயே!



திருமண்ணால் கண்மறைத்து திருமலையில் நின்றிருக்கும்
  திருப்பதி பெருமானே திருகோவிந்த ராஜனே
வரும் பக்தர்கள் விணையெலாம் தீர்த்திடுவாய்
  வரதனாய் ஏழுமலையில் வராகமாய் நிற்பவனே
கரவறையில் கணநேரக் காட்சியில் கரைத்திடுவாய்
  கருமேனித் திருமகனே கலியுக தெய்வமே
விரும்பிவந்து உனைக்காண விரும்பினாலும் நீ அழைக்காமல்
  வெறும்முயற்சி பலனில்லை வேங்கடவா எனை அழைப்பாயோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக