திங்கள், 20 ஏப்ரல், 2015

உமாபதி



இமயத்தில் குடிகொண்டு இளம் பிறைசூடி
  இனிய கங்கைதனை இருட்சடையில் தாங்கி
இமவான் மகளாம் இன்முக உமையை
  இடப்பக்கம் இருத்தி இயங்கும் ஈஸ்வரனே
கமகமென முழங்கும் உடுக்கையும் பகைகண்டு
  கனன்று சீறும் நாகமும் கையில் திரிசூலமுடன்
பூமகள் பாரம்தீர 'அழித்தல்' தொழிலதிபதியே
  பூமிதனில் எம்பாவம் நீக்கும் பிரதோஷ நாயகனே பணிந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக