ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

பள்ளிகொண்ட அரங்கன்



கொள்ளிடமும் காவிரியும் கோதையவள் சூட்டிய
  குளிர்மாலையென இருதோளில் அசைந்தோட
பள்ளிகொண்ட பெருமானாய் பாம்பனை மீதினில்
  பார்வையெலாம் தென்னிலங்கை திக்குநோக்க
அள்ளித்தரும் அபயகரம் அழகியசென்னி தாங்க
  அலங்கார ரங்கனாய் ஆட்கொள்ளும் பெருமானே
வெள்ளிமலரென விழிமலர்ந்து கள்ளத்துயில் களைந்து
  விரும்பி சரண்புகும் எம்மை காக்க எழுவாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக