கொள்ளிடமும் காவிரியும் கோதையவள் சூட்டிய
குளிர்மாலையென இருதோளில் அசைந்தோட
பள்ளிகொண்ட பெருமானாய் பாம்பனை மீதினில்
பார்வையெலாம் தென்னிலங்கை திக்குநோக்க
அள்ளித்தரும் அபயகரம் அழகியசென்னி தாங்க
அலங்கார ரங்கனாய் ஆட்கொள்ளும் பெருமானே
வெள்ளிமலரென விழிமலர்ந்து கள்ளத்துயில் களைந்து
விரும்பி சரண்புகும் எம்மை காக்க எழுவாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக