வெள்ளி, 17 ஏப்ரல், 2015

கோலமயில் முருகா



கோலமயிலும் கையினில் வேலும்
  குன்றமதில் நின்றும் குங்கும சந்தணமும்
பால் வெண்நீறும் பிள்ளை முகமும்
  பிரணவத்தின் 'ஒம்' உடன் பக்தனுக்கு அபயமும்
பொலியும் உத்திராட்சமும் புரியும் புன்னகையும்
  பரமகுருவாகி பழனிவாழ் பாலகனே
சீலமும் நற்சிந்தனையும் சித்திக்க வரமருள்

  சூரனை வென்றவனே சீக்கிரம் என்னை ஆட்கொள்வாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக