வியாழன், 16 ஏப்ரல், 2015

கனிந்து நீ அருள்வாயே!



பால்வண்ண ஆடைமாற்றி புதுநீலம் புனைந்தாயோ?
  பலவண்ண மயிலாட பாச அன்னமதை மறந்தாயோ
எல்லாம் அறிந்தவளே எழில்மிகு கலைவடிவே
  ஏந்திய வீணையை ஏன் அணைத்து மீட்டுகின்றாய்
பல்பொருள் ஏட்டினை பாசமுடன் எடுத்துவந்தாய்?
  பக்தன் எனக்கும் பாடம் புகட்ட வந்தனையோ
கல்விக்கு அதிபதியே காலம்கடந்து நிற்கின்றேன்
  கண்களில் அறிவினை கனிந்து நீ அருள்வாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக