கண்ணேறு நீங்கிட கண்முன்னே வைத்தேன்
காணுமிடம் எங்கும் கணபதியே நீஇருக்க
கண்ணேறு தான்படுமோ கவின்வளம் நீங்கிடுமோ
கண்மூன்று கொண்டு கண்இமையாது விழித்திருக்க
எண்ணம் தீதாகிடுமோ? எண்ணிலா தெய்வங்கள்
ஏந்திய ஆயுதங்கள் எண்கரங்களில் ஒளிவீச
வண்ணத் தாமரைமேல் வளர்சிம்ம வாகனமுடன்
வருகின்ற விநாயகனே வணங்குகிறேன் மலரடியே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக