சனி, 18 ஏப்ரல், 2015

பஞ்ச நிருத்யம்



விந்தை உயிர்களை விரும்பி படைத்தல்
  வேராக நின்று வழிவழி காத்தல்
பந்தம் நீக்கி பற்றினை அழித்தல்
  பாங்குடன் தீய பழவிணை மறைத்தல்
எந்தநேரமும் எதிர்வந்து எளிதாக காத்தல்
  எனஐந்திணை இடையறாது நடத்தும்சக்தி
சிந்தைக்கு விருந்தாக சிங்கார ஆடல்வழி
  சிலையாகி ஆடுகின்ற சிவமே போற்றி

இயக்க காளிகா இனிய தாண்டவம் (படைத்தல்)
  இனிக்கும் திருநெல்வேலி இளம்சிவப்பு தாமிரசபையில்
வியக்கும் கெளரி விநயமிகு தாண்டவம் (காத்தல்)
  விரும்பும் திருப்பத்தூர் வியக்கும் சிற்சபையில்
மயக்கம் நீக்கிடும் மாலைசந்தியா தாண்டவம் (அழித்தல்)
  மாமதுரை நகரின் வெள்ளியம்பல திருச்சபையில்
தயக்கமின்றி ஆடுகின்ற திரிபுர தாண்டவம் (மறைத்தல்)
  தண்ணருவி சூழ்குற்றாலம் திகழ்கின்ற சித்திரசபையில்

உயிர்களுக்காக ஒங்கார ஊர்த்தவ தாண்டவம் (அருளல்)
  உயர் ஆலங்காடு ஒளிரும் ரத்தினசபையில்
பயிர்வளர் பார்மீது பொழிகின்ற வானமுதாய்
  பஞ்சநடனம் இணைக்கின்ற பரமானந்த தாண்டவம்
அயர்வின்றி அகிலம்வாழ அழகுதில்லை கனகசபையில்
  அரனே அன்பே ஆனந்த சிவமே
துயர்நீக்கி தூய்மையாக்கி தூக்கிநிறுத்தும் பரம்பொருளே
  தொழுவேன் உந்தன்இரு திருவடியே சரண்புகுந்தேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக