நெஞ்சினைப் பிளந்துள்ளே நிலைபெற்ற
நாயகன் நாயகியை காட்டிய மாருதியே
கொஞ்சும் தாளக்கட்டை கையினில் ஏந்தி
கீர்த்தனமாய் ராமஜெயம் பாடும் அனுமனே
தஞ்சம் அடைந்தவரை தாயாகக் காத்திட
தயங்காமல் வருகின்ற ஆஞ்சநேயனே
நெஞ்சுருகி ராமசங்கீத்தனம் ஒலிக்குமிடமெலாம்
நெகிழ்ந்து கேட்டுஉருகும் சிரஞ்சீவியே
பஞ்சசெனப் பறக்கும் பிறவித் துயரெலாம்
பக்தியோடு உன்னைச் சரணடைந்திடவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக