நன்றிஒன்று நான்செல்வேன் நானறிந்த கவிதையினை
நயந்து படித்து நன்பொழியால் பாராட்டிய
என்னருமை நண்பர்கள் ஏற்றமிகு உறவினர்கள்
எனக்காக ஒர்பகுதி எழிலாக துவக்கிய
சின்னவள் வசுமதி அமிர்தாவுக்கு சிறப்பான நன்றி
சலிக்காமல் தட்டச்சில் சரசரவெனத் தட்டி
கண்மூடி திறக்குமுன் முகநூல் கவிமுகத்தில்
கருத்தோடு பதிவேற்றிய கண்மணி சித்தார்த்துக்கு ஒர்நன்றி
ஆன்மீகமலர் முகப்பில் அணிசெய்த கடவுளர்க்கு
அலங்கார கவிதையால் அணிவித்துப் பார்க்க
அன்பின் மிகுதியால் ஆண்டுகள் மூன்றில்
அழகாய் சேர்த்தவை அளித்துப் பகிர்ந்தேன்
இன்றுபதிவு செய்தேன் இனியநூறாவது கவிதை
இனிதே தொடர்ந்திட இணைகிறேன் உம்மோடு
என்றும் உம்சொற்கள் எந்தனுக்கு ஊக்கம்
என்றென்றும் நன்றி! எல்லோருக்கும் நன்றி!!
ராதாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக