கோடிமலர் மாலைதனை கோவிந்தனுக்கு சூட்டியே
கோதையாகி மாதவனை கைபிடித்த நாயகியே
பாடிப்பல் பாவையோடு பண்பான நோன்பிருந்து
பாமரர்கள் உயர்வெய்த பாதைகாட்டி நின்றவளே
ஆடிமாத பூரத்தில் அவதரித்த பூங்கிளியே
ஆண்டாளாகி அவனியில் அரங்கனை ஆண்டவளே
சூடியநல் சுடர்கொடியே சூழ்ந்து பணிகின்றோம்
சொல்மாலை சூட்டியவளே செகத்தினில் அருள்வாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக