கருமை நிறமும் கருநாகக் குடையும்
கோமேதக அணியும் கோலநீல ஆடையும்
உருமும் சிம்மமும் உயர்வான வாகனமாய்
உளுந்தின் உள்ளிருந்து உயர்மந்தாரை மலரணிந்து
விரும்பும் நட்பாக விளங்குகன்னி மிதுனதுலாம்
வளமைதரும் பசுவினம் வாழ்விக்கும் அதிதேவதை
இருபுறமும் தேவியர் இருந்து அருள்புரிய
இடர்நீக்கி இன்னருள்தரும் ராகுவை பணிவோமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக