தலைப் பாகையும் துள்ளிடும் சூலமும்
தாங்கிய தண்டமும் சின் முத்திரையும்
மலையென கம்பீரமும் மருட்டும் மீசையும்
முன்னெற்றியில் திருநீறும் குங்குமமும்
கலையாக உத்திராட்சமும் கண்களில் கருணையும்
கால்களை மடித்து காலமெலாம் அமர்ந்து
சிலையாக இருந்து சீரோடு எமை காக்கும்
சினமிகு முனீஸ்வரனே சிந்தையால் வணங்குவனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக