சனி, 18 ஏப்ரல், 2015

கார்த்திகை தீபம்



தீபம் ஒன்றேற்றி அத்தீபம் ஐந்தாக்கி
தீபாரதனை மீண்டும் ஐந்தினை ஒன்றாக்கி
தீபம் ஒன்றினை உன்முன் வைத்துபின்
தீபம் மாலை திருமலை ஏறும்

தீபம் மகாதீபம் மாலை மலையில்எழும்
தீபம் அகண்டதீபம் கார்த்திகையில் ஒளிவீசும்
தீபம் ஏகனாகி தீபமே அநேகனாகி
தீபம் அநேகமே தீபம் ஏகனாகும்

தீபச்சோதி வடிவானாய் திருஅண்ணா மலையானே
தீபசக்தி ஒன்றாகிய அர்த்த நாரீஸ்வரனே
தீபவிழா கண்டேன் கார்த்திகை திருநாளில்
தீபமென ஒளிவீச தூயவனே அருள்வாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக