நந்தி முன்னிருக்க நாற்கரங்கள் மான்மழுவோடு
நாதம் ஒலிக்கும் உடுக்கையும் நற்தணலும் ஏந்திட
சுந்தரமாய் கால்மடித்து சுகமாக வீற்றிருக்கும்
சந்திர சேகரனே சந்திரப் பிறைசூடி
முந்திடும் மூவிழிமூடி முடிதனில் கங்கைதாங்கி
மலையவள் முகம்தேடி மாநிலம் உய்விக்க
சந்தமோடு ஆடவல்ல சக்திஉமா அருகிருக்க
சிவமாகி என்னுள்ளே சிங்காரமாய் எழுந்தருள்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக