கன்றோடு விளையாடும் கருநீல மணியே
கலையான தலைமுடியில் கண்கவரும் மயிலிறகே
ஒன்றாக இணைந்து ஒளிவிடும் பொற்கிரீடமே
ஒய்யார நெற்றியில் ஒளிர்கின்ற திலகமே
புன்னகை பூத்திருக்கும் புதுமலர் இதழ்களே
பொலிகின்ற முகமதில் பூரிக்கும் விழிகளே
சின்னக் குழந்தையாகி சிரித்திடும் கண்ணனே
சீரான அஷ்டமியில் சிந்தையில் வந்தருள்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக