சனி, 11 ஏப்ரல், 2015

இளங்கன்றே



கன்றோடு விளையாடும் கருநீல மணியே
  கலையான தலைமுடியில் கண்கவரும் மயிலிறகே
ஒன்றாக இணைந்து ஒளிவிடும் பொற்கிரீடமே
  ஒய்யார நெற்றியில் ஒளிர்கின்ற திலகமே
புன்னகை பூத்திருக்கும் புதுமலர் இதழ்களே
  பொலிகின்ற முகமதில் பூரிக்கும் விழிகளே
சின்னக் குழந்தையாகி சிரித்திடும் கண்ணனே
  சீரான அஷ்டமியில் சிந்தையில் வந்தருள்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக