திங்கள், 13 ஏப்ரல், 2015

வைஷ்ணவோ தேவி



வெம்புலி மீதமர்ந்து விழிகள் கருணைசிந்த
  வில்லோடு சூலமும் விளங்கு கதையோடு கட்கமும்
தும்பைவெண் சங்கமும் திகிரியெனச்சுழலும் சக்கரமும்
  தாமரை மலரும் தந்திடும் அபயமும் கொண்டு
செம்மை ஆடையிலே சிவந்தஎண் கரங்களோடு
  செந்தூரப் பொட்டும் செவ்வாயில் புன்னகையும்கூட
தம்முடியில் கீரிடமும் தவழும் பொன்னாரமும்மின்ன
  தளிர்பாதம் காட்டி தாங்கவந்த தேவியே
அம்மையே வைஷ்ணவி அழகிய ஜெயமாதா
  அலைகடல் நாயகியே அனைவரையும் காத்திட
இமயத்துப் பனியிலே இருந்து அருள்பவளே
  இன்று உன்னை சரணடைந்தோம் இனிஎன்றும்
                       எம்மை ஏற்றருள் வாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக