வெம்புலி மீதமர்ந்து விழிகள் கருணைசிந்த
வில்லோடு சூலமும் விளங்கு கதையோடு கட்கமும்
தும்பைவெண் சங்கமும் திகிரியெனச்சுழலும் சக்கரமும்
தாமரை மலரும் தந்திடும் அபயமும் கொண்டு
செம்மை ஆடையிலே சிவந்தஎண் கரங்களோடு
செந்தூரப் பொட்டும் செவ்வாயில் புன்னகையும்கூட
தம்முடியில் கீரிடமும் தவழும் பொன்னாரமும்மின்ன
தளிர்பாதம் காட்டி தாங்கவந்த தேவியே
அம்மையே வைஷ்ணவி அழகிய ஜெயமாதா
அலைகடல் நாயகியே அனைவரையும் காத்திட
இமயத்துப் பனியிலே இருந்து அருள்பவளே
இன்று உன்னை சரணடைந்தோம் இனிஎன்றும்
எம்மை ஏற்றருள் வாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக